திருநெல்வேலியில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. திருவுருவ சிலைக்கு, மாலை அணிவித்து, மரியாதை

திருநெல்வேலியில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. திருவுருவ சிலைக்கு, மாலை அணிவித்து, மரியாதை

 கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. திருவுருவ சிலைக்கு, மாலை அணிவித்து, மரியாதை செய்த, தி.மு.க.வினர்! திருநெல்வேலி,செப்.5:  சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி.யின், 150- ஆவது பிறந்த தினமான இன்று (செப்டம்பர்.5) திருநெல்வேலி டவுன் பொருட்காட்சி திடலில் அமைந்திருக்கும், வ.உ.சி.மணி மண்டபத்தில் உள்ள, வ.உ.சி.யின், முழுவுருவச்சிலைக்கு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A.L.S. லட்சுமணன் தலைமையில், முன்னாள் நகர்மன்ற தலைவர் சுப.சீத்தாராமன்,  முன்னாள் மாநிலங்கள் அவை உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் உட்பட, ஏராளமான தி.மு.க.வினர்,"மலர் மாலைகள்" அணிவித்து, "மரியாதை" செய்தனர். வ.உ.சி.யின், 150- ஆவது பிறந்த நாள் பரிசாக, 14 சிறப்புத்திட்டங்களை, நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்த, "முதலமைச்சர்" மு.க.ஸ்டாலினுக்கு, இந்த நிகழ்ச்சியின் போது, " நன்றி" தெரிவிக்கப்பட்டது.