இராமநாதபுரம் மாவட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டம்

 இராமநாதபுரம் மாவட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டம்21.09.2021 அன்று எல்பி எஃப் அலுவலகத்தில் வின்சென்ட் அமலதாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர்

எம்.சிவாஜி ஏஐடியூசி மாவட்ட துணைச் செயலாளர்

 சண்முக ராஜேஸ்வரன் எஸ்எம்எஸ் மாவட்ட செயலாளர்  S.குமரகுருபரன்

எல்பி எஃப் மாவட்டத் தலைவர் காஞ்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 இக்கூட்டத்தில் 27.09.2021 அன்று நடைபெறக்கூடிய தேசம் தழுவிய மறியல் போராட்டத்தில் ராமநாதபுரம் பரமக்குடி ஆகிய இரு இடங்களில் ரயில் மறியல் போராட்டத்தில் பங்கெடுப்பது எனவும், திருவாடானை ராமேஸ்வரம், சிக்கல், கடலாடி, கமுதி ஆகிய மையங்களில் நடைபெறும் சாலை மறியல் போராட்டத்திலும் அனைத்து சங்க  தொழிலாளர்களும் திரளாக பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

 23 9 2021 காலை10 மணிக்கு பரமக்குடி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பும்,

 மாலை 4 மணிக்கு ராமநாதபுரம் புறநகர் பணிமனை முன்பும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

 24 9 2011 அன்று அனைத்து அரங்குகளும் இணைந்து பொதுமக்கள் மத்தியில் துண்டுபிரசுரம் வெளியிடுவது என முடிவு செய்யப்பட்டது போக்குவரத்து மின்சாரம் போன்ற அரங்கங்களின் மூலம் துண்டுப்பிரசுர பிரச்சாரம் செய்வது  என முடிவு செய்யப்பட்டது.

 தோழர்களே மேலே கண்ட முடிவுகளை அனைத்து சங்கங்களும் கூட்டாக அமுலாக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

 S.குமரகுருபரன்

HMS இராமநாதபுரம் மாவட்ட செயலாளர்