சர்வதேச அளவில் விருதுகள் பெற்று சாதனை படைத்த மாணவிக்கு உதவிக்கரம்
மாணவி ஜனனி சேலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவி பல்வேறு போட்டிகளில் சர்வதேச அளவில் கலந்துகொண்டு விருதுகளை பெற்றவர். தற்போது அந்த மாணவி இரண்டு கிட்னியும் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அம்மாணவியின் மருத்துவச் செலவை தமிழக முதல்வர் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார். இருப்பினும் மாணவியின் பராமரிப்புக்கு பல்வேறு தொடர் செலவுகள் உள்ளதால் கருணை கூர்ந்து உதவிடுமாறு மாணவியின் தாய் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் அம்பேத்கார் மக்கள் இயக்கம் மாநிலத் தலைவர் சேலம் ஜங்ஷன் ஆ. அண்ணாதுரை அவர்கள் ரூ 25000 ஆயிரத்தை மாணவி பயிலும் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளர் முன்னிலையில் மாணவியின் தாய் வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்தார்.
சீப் ரிப்போட்டர் மா அருள்நேரு