முத்துமாரியம்மன் கோவிலில் முளைப்பாரி உற்சவ விழா

முத்துமாரியம்மன் கோவிலில் முளைப்பாரி உற்சவ விழா


ராமநாதபுரம் செப்-21

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் கள்ளர் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் முளைப்பாரி உற்சவ விழா இன்று விமரிசையாக நடைபெற்றது. இன்று காலை சுமார் 60 பெண்கள் அருள்மிகு சித்திவிநாயகர் கோவிலிலிருந்து பால் குடம் எடுத்துவந்து அம்பாளுக்கு விசேஷ அபிசேக ஆராதனை நடந்தது. கொரோனா காலமென்பதால் மிக எளிமையாக கோயிலில் பூஜைகள் நடத்தப்பட்டன. இதற்கான ஏற்பாட்டினை M.வீரசேகர், A. புல்லாணி, G.மணிகண்டன், இளையராஜா, K.வேலு, A.மாரி ஆகிய விழாக்குழுவினர் செய்திருந்தனர். 


ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒன்பதிவாளர் N.A. ஜெரினா பானு