மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்கள் திரும்பப் பெறக் கோரி எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்கள் திரும்பப் பெறக் கோரி எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ராமநாதபுரம் செப்-27

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் விரோத சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் ,மின்சார மசோதாவை வாபஸ் பெற வேண்டும்  என வலியுறுத்தி தில்லியில் கடந்த 10 மாத காலமாக லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும்,  பொது துறை சொத்துக்களை விற்க கூடாது என பல்வேறு கோரிக்கைகளுக்காக இந்தியா முழுவதும் தொழிற்சங்கங்கள் இன்று போராட்டம் அறிவித்திருக்கின்றன. இவர்களுக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் உள்ள எல்ஐசியில் பணிபுரியும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் எல்ஐசி அலுவலகம் முன்பு மதியம் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராமநாதபுரம் எல்ஐசி கிளை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் பிரேமலதா அவர்கள் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் முத்துப்பாண்டி ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கிப் பேசினார். கிளை பொதுக்குழு உறுப்பினர் சேசு அவர்கள் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாலிசிதாரர்களும், முகவர்களும், எல்ஐசி ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A ஜெரினா பானு