தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட கூட்டம்.
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது கூட்டத்தில் கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்வதில் உள்ள குளறுபடிகளை நீக்கி சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 50% கல்விக்கட்டணம் குறைப்பதை கைவிட்டு அரசு ஒரு மாணவனுக்கு எவ்வளவு செலவு செய்கிறதோ அதையே தனியார் பள்ளி கல்வி கட்டணமாக நிர்ணயித்து தரக்கோரி நீதியரசரை கேட்டுக் கொள்வது என்றும்.....
நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப்பள்ளிகள் ஆக்குவது.....
அனைவருக்கும் டிடிசிபி கேட்காமல் ஐந்தாண்டு அங்கீகாரம் அங்கீகாரம் பெற்று பத்தாண்டுகளான பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம்....
அறக்கட்டளை மூலம் நடைபெறும் கல்வி ஸ்தபானங்களுக்கு சொத்து வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்தும்....
தனியார் பள்ளி வாகனங்களுக்கான 100% அபராதம் போடுவதை கைவிட்டு.....ஓடாத காலங்களுக்கு ஓடாத நாட்களுக்கு சாலை வரி இருக்கை வரி இன்சூரன்ஸ் எஃப்சி செய்வதிலிருந்து இந்த ஓராண்டுக்கு விலக்கு அளிப்பது என்றும்.......
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான வகுப்புகள் உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் தமிழக அரசை கேட்டுக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டு....
திருவள்ளூர் மாவட்டத்தை சங்க மேம்பாட்டுக்காக கிழக்கு-மேற்கு
என்று இரண்டு மாவட்டங்களாக பிரித்து புதிய நிர்வாகிகளை நியமித்து மாநிலத் தலைவர் பேராசிரியர் கனகராஜ் மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் மாவட்ட தலைவர் முனைவர் ராஜன் மாவட்ட செயலாளர் முனைவர் மணிவண்ணன் நர்சரி பிரைமரி பள்ளிகளின் மாவட்ட செயலாளர் அருள்தாஸ் மாவட்ட துணைத்தலைவர்கள் ஜேம்ஸ் ஜாகோப் டாக்டர் செபஸ்டியன் உட்பட அனைத்து பள்ளி நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்த போது எடுத்த படம்.