தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாய நலச் சங்கம் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு
5.9.2025 அன்று வெள்ளிக்கிழமை தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் ஆலோசனை பொதுக்கூட்டம் சங்கத்தின் தலைமை அலுவலகம் கிளாப் பாளையம் கிராமத்தில் நடைபெற்றது.
இதில் சங்கத்தின் மாநில தலைவர் S.மதிவாணன் மாநில பொதுச் செயலாளர் G.முருகன் மாநில பொருளாளர் G.சதீஷ் மாநில கவுரவத் தலைவர் K. விஜயகுமார் மாநில சிறப்புத் தலைவர் R.துரைசாமி மாநில பேச்சாளர் S.சௌந்தரராஜன் மாநில ஆலோசகர் பம்பை ராஜேந்திரன் மாநில செயற்குழு உறுப்பினர் K.A.மணிகண்டன் S.கல்வராயன் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் K.A.சிவா மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் அண்ணாமலை வீராசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை பொதுக்கூட்டத்தில் இதுவரை செயல்பட்டு வந்த மாநிலத் துணைத் தலைவர்## மாரி S/o நன்னி அவர்கள் சங்கத்தின் கொள்கைகளுக்கு முரணாகவும் சங்கத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் மாநில ##துணைத்தலைவர் மற்றும் ##அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய மாநில துணைத்தலைவராக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் ஆதனூர் கிளாப்பளையம் கிராமத்தைச் சேர்ந்த S.கல்வராயன் த/பெ சுப்பிரமணியன் அவர்களை நியமித்து தீர்மானம் ஒருமனதாக அனைவரது முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது.