கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம்; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாணயத்தை வெளியிடுகிறார்....!

கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம்; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்  நாணயத்தை வெளியிடுகிறார்....!

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை, திமுக அரசு விமர்சையாகக் கொண்டாடி வருகிறது. 

அதன் ஒரு பகுதியாகக் கருணாநிதியின் நினைவாக 100 ரூபாய் நாணயம் வெளியிடத் தமிழ்நாடு அரசு, மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தது. அதற்கு மத்திய அரசும் அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயத்தை வெளியிடுவதற்கான வேலைகளில் தமிழ்நாடு அரசு மும்முரமாக இறங்கியது.

அதன்படி, சென்னை கலைவாணர் அரங்கத்தில் 18-08-2024 (இன்று) `கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழா' நடைபெறும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

 கருணாநிதி

இன்று மாலை 6:50 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நாணயத்தை வெளியிடுகிறார், அதைத் தொடர்ந்து உரையாற்றவும் இருக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த அரசு விழாவுக்குத் தலைமை தாங்குகிறார்.

 திமுக - ஸ்டாலின்

இந்த விழாவில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள், சென்னை மாநகர மேயர் மற்றும் துணை மேயர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்