ஓசூர் காந்திநகர் பகுதியில் ஜி .என் கைஸ் நண்பர்கள் குழுவினர் சார்பில் விநாயகர் சதுர்த்தி

 ஓசூர் காந்திநகர் பகுதியில் ஜி .என் கைஸ் நண்பர்கள் குழுவினர் சார்பில் விநாயகர் சதுர்த்தி 

ஓசூர் காந்திநகர் பகுதியில் ஜி .என் கைஸ் நண்பர்கள் குழுவினர் சார்பில் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

பிற மாவட்டங்களை விட  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் வினாயகர் சதுர்த்தி விழா வித்தியாசமாகவும் பெரும் பொருட்செலவுடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஓசூர் காந்திநகர் பகுதியில்

26 வது வருடமாக காந்திநகர் ராஜேஷ் தலைமையில்

கேதார்நாத் கோவில் மாதிரி தோற்றத்தில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு, சிவன் வேடத்தில் விநாயகர் சிலை தத்துவமாக அமைக்கப்

பட்டுள்ளது. பெரும் பொருட் செலவுடன் அமைக்கபட்டுள்ள கேதார்நாத் கோவில் மாதிரி தோற்றத்தில் உள்ள விநாயகர் சிலையை காண பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் நடைபெறும் இந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க படுகிறது. ஏழு நாட்கள் சிவன் வடிவில் உள்ள விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்த பின்னர் வினாயகர் சிலை  நீர் நிலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு விதர்ஜனம் செய்யப்பட உள்ளது.

B. S. Prakash