அரசு பள்ளிகளுக்கு மட்டும் காலாண்டு விடுமுறை நீட்டிப்பு- தனியார் பள்ளிகள் அனைத்தும் அக்டோபர் 3ம் தேதி திறக்கப்படும்....!!

அரசு பள்ளிகளுக்கு மட்டும் காலாண்டு விடுமுறை நீட்டிப்பு- தனியார் பள்ளிகள் அனைத்தும் அக்டோபர் 3ம் தேதி திறக்கப்படும்....!!

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததன் காரணமாக பள்ளிகள் 10 நாட்கள் தாமதமாகவே தொடங்கிய நிலையில் தற்போது சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் காலாண்டு தேர்வுகள் தொடங்கின. இதனிடையே 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

அதில் 1-3ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 23 - அக்டோபர் 2ஆம் தேதி வரை 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்றும், 4 முதல்-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.28 - அக்.2ஆம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டு அக்டோபர் 3ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை முதலில் அறிவித்திருந்தது.

இந்நிலையில் 2 கட்டங்களாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பாக அக்டோபர் 6ஆம் தேதி வரை ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால் காலாண்டு விடுமுறை தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 5ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 3ஆம் தேதிக்கு பதிலாக 9ஆம் தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 6 முதல் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் மூன்றாம் தேதியை பள்ளிகளை திறக்கலாம்..

 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தான் பயிற்சிகள் நடைபெறுகிறது. அவர்கள் தான் விடுமுறை விடவில்லை என்றால் போராட்டம் நடத்துவதாக அறிவித்தார்கள் அவர்களுக்காகத்தான் இந்த விடுமுறை கூடுதலாக விடப்பட்டிருக்கிறது .

இது தனியார் நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப்பற்று சிபிஎஸ்சி பள்ளிகள் கடைபிடிக்க வேண்டியது இல்லை. 

உங்கள் விருப்பப்படி வழக்கப்படி நீங்கள் மூன்றாம் தேதியே பள்ளிகளை திறந்து வழக்கும் போல் தொடர்ந்து நடத்தலாம்.என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே. ஆர். நந்தகுமார் தெரிவித்துள்ளார்.