மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்து : வீட்டில் இருந்த டிவி, பிரிட்ஜ், 68,000 ரொக்கப் பணம் எரிந்து நாசம்

 *மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்து : வீட்டில் இருந்த டிவி, பிரிட்ஜ், 68,000 ரொக்கப் பணம் எரிந்து நாசம்*

ஓசூர் மாநகராட்சி, 41வது வார்டு இராயக்கோட்டை ஹவுசிங் போர்டு எல் ஐ ஜி குடியிருப்பு பகுதியில் மேல் தளத்தில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் தனியார் கம்பெனி ஊழியர் கதிரேசன் (50) இவரது மனைவி சம்சாத், இன்று வழக்கம்போல கதிரேசன் வேலைக்கு சென்று விட அவரது மனைவி அருகில் உள்ள உறவினர் ஒருவரை பார்க்க சென்றுள்ளார்.

அப்போது மின் கசிவால் அவர்களது வீட்டில் உள்ள பொருட்கள் தீ பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மின்சாரத்தை துண்டித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கதிரேசனுக்கும், ஓசூர் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த டிவி, பிரிட்ஜ், சுய உதவிக் குழுவில் வாங்கி வைத்திருந்த 68,000 ரொக்க பணம். துணிமணிகள் மற்றும் வீட்டிலிருந்த ஏராளமான பொருள்கள் தீயில் எரிந்து கருகி சேதமானது. 

வீட்டிலிருந்த பொருள்கள் அனைத்தும் சேதமானதால் வாழ்வாதாரம் இன்றி தவித்த அந்த குடும்பத்தினருக்கு, அதிமுக பகுதி செயலாளர் பி ஆர் வாசுதேவன், ராஜு மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் குபேரன் என்கிற சங்கர், அசோகா ரெட்டி ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினர். இந்த தீ விபத்து குறித்து ஓசூர் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.