புதன்கிழமை பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்...!!

 புதன்கிழமை பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்...!!

செவ்வாய்கிழமை விடுமுறை முடிந்து புதன்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

தமிழகத்தில் புதன்கிழமையன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அப்படி ஒரு முடிவு எதுவும் எடுக்வில்லை என தெரிவித்துள்ளார். சனிக்கிழமை போகி பண்டிகை, ஞாயிற்றுக் கிழமை பொங்கல் பண்டிகை, திங்கள் கிழமை மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது. செவ்வாய் கிழமை காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. இவை அனைத்தும் தமிழக அரசின் விடுமுறை தினங்களாகும்.

ஜனவரி 18ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். பொங்கலுக்கு பின் புதன்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து அரசு முடிவெடுக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்..

தமிழக மக்களிடம் தற்போது புதிய வியாதி ஒன்று பரவி வருகிறது. நான்கு நாட்கள் ஒரு சேர விடுமுறை விடுவதற்கு இல்லை அதற்கு முன்பு ஒரு நாளும் அதற்கு பின்பு ஒருநாளும் விடுமுறை வேண்டும் என்று கேட்பது வாடிக்கையாக்கிவிட்டது.

 இந்த வியாதி மக்களுக்கு இருக்கிறதோ இல்லையோ தெரியவில்லை ஆனால் ஊடகங்கள் இடையே பெருமளவு பரவி உள்ளது. யார் தான் இப்படி உசுப்பேத்தி விடுகிறார்களோ தெரியவில்லை. ஆளாளுக்கு அறிக்கை வாசிக்க தொடங்கி விடுகிறார்கள்.

 இதையெல்லாம் முறியடித்து புதன்கிழமை பள்ளிகள் செயல்படும் என்று அறிவித்துள்ள பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேசை பாராட்டத்தான் வேண்டும்.