ஓசூரில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

 ஓசூரில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு


தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று தமிழகம் முழுவதும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊறுமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜெய்சந்திரபானுரெட்டி தலைமையில் உறுதிமொழி வாசிக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிகாரிகள், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனர் நிகழ்ச்சியில் பேசிய மாண்புமிகு அமைச்சர் காந்தி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு யாரும் அடிபணியக் கூடாது என தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார். அதேபோல மாணவ செல்வங்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது என எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன், துணை மேயர் ஆனந்தய்யா, பெற்றோர் ஆசிரியர்கழகதலைவர் செந்தில்குமார், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள்,ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

Hosur Reporter. E.V. Palaniyappan

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்