ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

 ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் பிளஸ் 2 முடித்து கல்லுாரி படிப்பை தொடர சிரமப்படும் மாணவிகள் அர்ச்சனா, ஸ்வாதி, ஜனனி மற்றும் மாணவர்கள் சந்துரு, மனோஜ் ஆகியோருக்கு விடியல் அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. ஓசூர் மாநகர மேயர் சத்யாEx.MLA 5 மாணவ, மாணவிகளுக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை வழங்கினார்.

மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, பள்ளி தலைமையாசிரியர் லதா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எல்லோரோமணி, விடியல் அறக்கட்டளை செயலாளர் சிவக்குமார் பகுதி செயலாளர்கள் திம்மராஜ், ராமு, மாமன்ற உறுப்பினர் மோசின் தாஜ் நிசார், வார்டு கழக நிர்வாகிகள் குமார், மணி, சீனிவாசன், லோகநாதன்,சேக் பாபு, சக்தி வேல்,   உட்பட பலர் கலந்து கொண்டனர்.