ஒசூரில் 3பள்ளிகளில் 516 விலையில்லா மிதிவண்டிகளை ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மேயர் வழங்கினர்

ஒசூரில்  3பள்ளிகளில் 516 விலையில்லா மிதிவண்டிகளை ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மேயர் வழங்கினர்


ஒசூரில் ஜான்போஸ்கோ மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 3பள்ளிகளில் 516 விலையில்லா மிதிவண்டிகளை ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மேயர் வழங்கினர்.

 ஒசூர் மாநகராட்சி, தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள அரசு உதவிப்பெறும் ஜான்போஸ்கோ பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 159 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை ஒசூர் எம்எல்ஏ Y.பிரகாஷ் மற்றும் ஒசூர் மாநகர மேயர் S.A.சத்யா அவர்கள் கூட்டாக வழங்கினர்.

பின்னர், ஓசூர்,முல்லைநகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 286 மாணவ, மாணவிகளுக்கும், சீதாராம் நகர்  அரசு உருது மேல்நிலைப்பள்ளியில் 71 மாணவர்கள் என மொத்தமாக 3 பள்ளிகளில் பயிலும் 516 மாணவ மாணவிகளுக்கு இன்று விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாநகர துணை மேயர் C.ஆனந்தய்யா, மாவட்ட அவைத் தலைவர் அ.யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் தா.சுகுமாரன், மாவட்ட துணை செயலாளர் தனலட்சுமி, மாவட்ட இலக்கிய அமைப்பாளர் எல்லோராமணி, பகுதி செயலாளர்கள் வெங்கடேஷ், ராமு, திம்மராஜ், மாமன்ற உறுப்பினர்கள் இந்திராணி, மாதேஸ்வரன், மம்தா சந்தோஷ், மேகன்,  மாநகர நிர்வாகிகள் செந்தில்குமார், கோபாலகிருஷ்ணன்,  சாந்தி, ரவிக்குமார், தியாகராஜ், சென்னீரப்பா, ஜெய் ஆனந்த், முருகேஷ், மாதேஷ், மாவட்ட  மாணவர் அணி அமைப்பாளர் ராஜா, வார்டு செயலாளர்கள் ராஜேந்திரன், குமார், ஹரிபிரசாத், சிவக்குமார், ஜான், பெற்றோர் கழக ஆசிரியர் கழக தலைவர் கோ.மகேஷ் பாபு, சங்கரநாராயணன், முருகன்,அருளரசன்,முனிராஜ், வீராசாமி,கணேசன், செல்வம், மோகன்குமார்,முரளி, அருள்,பாஸ்கர்,பழனி,கலாவதி, ஆடிட்டர் மயில்வாகனன்,ராஜவேலு,மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Hosur Reporter. E. V. Palaniyappan