தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 101 நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை

 தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்  101 நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை

  • நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும்.
  • சட்ட விதிமுறைகளை பின்பற்றாத 60 கடை நிறுவனங்கள், 41 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 101 நிறுவனங்கள் மீது நடவடிக்கை.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுதந்திர தினத்தில் விடுமுறை வழங்காத 101 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணை யாளர் (அமலாக்கம்) வெங்கடாஜலபதி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு தேசிய பண்டிகை விடுமுறை சட்டம், உணவு நிறுவன சட்டத்தின் கீழ் தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினமான நேற்று கடைகள், உணவு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறு வனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும்.

அவ்வாறு விடுமுறை அளிக்காத பட்சத்தில் அன்றைய தினம் பணிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அனுமதித்து தொடர்புடைய தொழிலாளர்களுக்கு அறிவிப்பு அளிக்க வேண்டும்.

அதன் நகலை தொழி லாளர் துணை அல்லது உதவி ஆய்வாளருக்கு அனுப்பி விடுமுறை தினத்தன்று நிறுவனத்தில் பார்வைக்கு வைக்க வேண்டும்.

இந்நிலையில் சுதந்திரத் தினத்தன்று கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் நேற்று கடைகள், உணவு நிறுவனங்களில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், 68 கடைகள், என 114 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் சட்ட விதிமுறைகளை பின்பற்றாத 60 கடை நிறுவனங்கள், 41 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 101 நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.