ஒசூர் மாநகரில் "என் குப்பை எனது பொறுப்பு

 ஒசூர் மாநகரில் "என் குப்பை எனது  பொறுப்பு



ஒசூர் மாநகரில் "என் குப்பை எனது  பொறுப்பு" என்னும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை குப்பை சேகரித்து துவக்கி வைத்த மாநகர மேயர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, வளர்ந்து வரும் நகரங்களில் ஆசியாவிலேயே 4 இடத்தை பிடித்திருப்பதாக கூறப்படுகிறது

மக்கள் தொகை, குடியிருப்புக்கள் அதிகம் உள்ள ஒசூர் மாநகரில்  "என் குப்பை எனது பொறுப்பு' என்னும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை மாநகர மேயர் இன்று துவக்கி வைத்தார்

ஒசூர் மாநகரத்தை தூய்மைப்படுத்தும் நோக்கில் 700 துப்புரவு பணியாளர்கள் மூலம் பகுதி வாரியாக குப்பைகள் அகற்றப்பட உள்ளன

15 நாட்கள் இந்த தூய்மை பணிகள் நடைப்பெற திட்டமிடப்பட்டுள்ள நிலையில் முதல் நாளான இன்று ஒசூர் பேருந்து நிலையம் அருகே குப்பைகளை சேகரித்து ஒசூர் மாநகர மேயர் சத்யா அவர்கள் பணிகளை துவக்கினார்.

அப்போது ஒசூர் மாநகர ஆணையாளர் பாலசுப்பிரமணியன், துணை மேயர் ஆனந்தய்யா மாமன்ற உறுப்பினர்கள் N.S.மாதேஷ்வரன், சென்னீரப்பா, காந்திமதி கண்ணன்,  மோசின் தாஜ் நிசார், பெருமாயி அருள், மாரக்கா சென்னீர்,  மாதேஷ், தேவி மாதேஷ், குரு  மஞ்சுளா, கிருஷ்ணன், சிவராமன், புஷ்பா, உடனிருந்தனர்.

Hosur Reporter: E V. Palaniyappan.