கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் .....இடுபொருட்கள்....

 கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் .....இடுபொருட்கள்....

பள்ளிபாளையம் பகுதியில்..... கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் .....இடுபொருட்கள்.... அட்மா தலைவர் திரு யுவராஜ் வழங்கினார்.....நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம்  கடையநல்லூர் ஊராட்சியில்... கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இடு பொருட்கள் வழங்கும் விழா அட்மா தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில்  திருமதி சி கலைச்செல்வி வேளாண்மை உதவி இயக்குனர் முன்னிலை வகித்தார்.. சிறப்பு விருந்தினராக வேளாண்மை துணை இயக்குனர் சுந்தர்ராஜ்   அவர்களும் கலந்து கொண்டனர்.

 இவ்விழாவில்  விவசாயிகளுக்கு கைத்தெளிப்பான் 5 நபர்களுக்கும்  

 மின்கல தெளிப்பான் 5 நபர்களுக்கும் வரப்பு உளுந்து விதை 5 கிலோ வீதம் 15 நபர்களுக்கும் தோட்டக்கலை துறை சார்பில் விதைத் தொகுப்பு  இரண்டு நபர்களுக்கும்.  பிளாஸ்டிக் ட்ரம்  மற்றும் காய்கறி  ட்ரே ..இரண்டு நபர்களுக்கும் ஊக்குவிப்பு மானியம்  ஒரு நபருக்கும்  வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை  உதவி இயக்குனர்கள் :அனிதா.,

 யாஸ்மின்  பி வி.. எஸ் சக்திவேல், திரு பாலாஜி. உதவி விதை அலுவலர்கள், ஆகியோர் செய்திருந்தனர். இதேபோல் 

 எலந்தகுட்டை ஊராட்சியில்...

 ஒரு தலைவர் திரு வெங்கடாசலம் அவர்கள் முன்னிலையில்

 தோட்டக்கலை அலுவலர் செல்வி,,, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பூபாலன்  கலந்துகொண்டு  விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களை வழங்கினார்கள்.

தட்டாங்குட்டை ஊராட்சியில்  ஊராட்சி மன்ற தலைவர்  திருமதி புஷ்பா முன்னிலையில் திரு  குப்பன்னன்,துணை வேளாண்மை அலுவலர். மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் காமேஷ் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு இடு பொருட்களை வழங்கினார்கள்..

ராஜேஷ் கண்ணன் செய்தியாசிரியர்