மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலை செய்யும் பஞ்சாயத்து தலைவர்களின் லட்சணத்தை பாருங்கள்....!?

மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலை செய்யும் பஞ்சாயத்து தலைவர்களின் லட்சணத்தை பாருங்கள்....!?


 *e panchayat NNP ஆப்ஸ்க்கு போங்க...* *உங்கபஞ்சாயத்து கணக்கை பாருங்க.... தலைவர்களை கணக்கு கேளுங்க...*

ஆயிரம் ரூபாய் மாத பயணப்படியை  தவிர பத்து பைசா சம்பளம் இல்லாதது பஞ்சாயத்து தலைவர் பதவி..!!

ஓட்டுக்கு 500 ம்

போஸ்ட்க்கு 5,00,000 மும்

கொடுத்து அந்த எழவு பதவியை

வாங்கி இவர்கள் மக்களுக்காக

உழைக்கிற இலட்சணம் இருக்கே...

தூத்துக்குடி மாவட்டம்

கோவில்பட்டி அருகே

அப்பனேரியை சேர்ந்த சீதாராமன்

எதையோ கூகுளில் தேடிக்

கொண்டிருந்த போது e panchayat

என்று வர go கொடுத்து உள்ளே

போனால் NPPஆப்ஸ். அதாவது

National Panchayat Portal.

ஆர்வக்கோளாறில் அப்பனேரி என்று அடித்தவருக்கு அதிர்ச்சி.. அதிர்ச்சி.... அதிர்ச்சி....

ஆம் ...13 ஏக்கர் பரப்பளவு கொண்ட அப்பனேரி ஊரணியை 314 நாட்கள் (Man Power working days) தூர்வாரியதாக 50 ஆயிரத்து 649 ரூபாய் வீதம் ஐந்து வருடங்களுக்கு 2,53,245 ரூபாய் ஊராட்சிநிதியிலிருந்து எடுத்திருப்பது தெரிய வந்திருக்கிறது. 

அதாவது முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் கதை வசனம் எழுதிய ஒரு பரோடுக்கு வெட்டாத கிணறு, போடாத ரோடுக்கு  பணம் எடுப்பது போன்று இல்லாத ஊரணிக்கு கால்வாய் வெட்டியதாக கணக்கு காட்டி இருக்கிறார்கள்.

நூறு நாள் 

வேலைத்திட்டத்தில்...!!

உண்மை இதுதான்...

அந்த ஊரில் ஊரணியே இல்லை.

இல்லாத ஊரணியை தூர் வாரியதைக்கூட ஏத்துக்கலாம்

ஆனா அந்த ஊரணிக்கு தண்ணீர் வரத்துக்கு கால்வாய் வெட்டியதாக 2 இலட்சத்து பத்தாயிரம் ரூபாய் ஆட்டய போட்டதை நினைக்கும்போது...

ஒரு ஓட்டுக்கு 500 என்ன5,000 கூட கொடுத்து வாங்குவானுக....

ஆகவே இளைஞர்களே !!!

கண்ட கண்ட வெப்சைட்ல போயி

கண்ட கருமத்தையும் பாக்காமe panchayat NNP ஆப்ஸ்க்கு போங்க. இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த ஊராட்சிகளின் குடுமியும் அங்கே இருக்கு.

இதையெல்லாம் கேட்பதற்கு தான் வருஷத்திற்கு நான்கு முறை கிராம சபை கூட்டம் கூட்டப்படுகிறது. 

அங்கே உங்கள் குறைகளை மட்டுமல்ல கேள்விகளையும் முன்வைக்கலாம, .mகணக்கு வழக்குகளையும் பார்க்கலாம்்.

 ஆனால் பல இடங்களில்   ஒரு   தேனிருக்கும், பிஸ்கட்டுக்கும் , மிஞ்சிப்போனால்  ஒரு பாக்கெட் பிரியாணிக்கும் என்றுதான் சென்று கொண்டுள்ளது.  அங்கு சென்று கணக்கு கேட்கும்  திராணி யாருக்கும் இல்லை.

 அதனால்தான் பல ஊராட்சிகளில் பஞ்சாயத்து தலைவர்கள் மட்டுமல்ல பஞ்சாயத்து செயலாளர்கள் கூட புதுப்புது கார்களில் கொடிகட்டி பறக்கிறார்கள்

சிந்திப்பீ்ர்...! செயல்படுவீர்.....!!