மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி முகாம்

மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி முகாம்



ஓசூரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் ஓசூர் வட்டார குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் வட்டார அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்த இனிய நிகழ்வில் மாவட்ட புள்ளியியல் ஆய்வாளர் சீனிவாசன் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார். திட்ட அலுவலர் நித்தியா வரவேற்புரை ஆற்றினார். முகாமிற்கு ஓசூர் மாநகர துணை மேயர் ஆனந்த் ஐயா குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் அசோகா, சிவராமன், முருகம்மாள் மதன்,  ஸ்ரீதர் பாக்யலட்சுமி குப்புசாமி மற்றும் பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.

 ஓசூர் செய்தியாளர் E.V..பழனியப்பன்