காவேரிப்பட்டினம் பேரூராட்சி தலைவராக அம்சவேணி செந்தில்குமார்

காவேரிப்பட்டினம் பேரூராட்சி தலைவராக அம்சவேணி செந்தில்குமார்

காவேரிப்பட்டினம் பேரூராட்சி தலைவராக அம்சவேணி செந்தில்குமார் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த நிலையில் இன்று காவேரிப்பட்டணத்தில் பேரூராட்சி தலைவராக தேர்தெடுக்கப்பட்ட அம்சவேணி செந்தில்குமார் முறைப்படி தலைவராக.பதவி ஏற்றுக்கொண்டார்

காவேரிப்பட்டினம்  சந்தைப்பேட்டையில் உள்ளபேரூராட்சி அலுவலகத்தில் அம்சவேணி செந்தில்குமார்.துணைத் தலைவராக மாலதி மாதையனும்  இன்று. பொருப்பேற்று கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில்  காவேரிப்பட்டினம் ஒன்றிய திமுக செயலாளர் பாபு மற்றும் ஏராளமான கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.

விழாவில் பங்கேற்ற நூற்றுக்கும் மேலானோர் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட அம்சவேணி அவர்களுக்கும் அவரது கணவர் செந்தில் குமாருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர் .

நீண்ட இடைவேளைக்கு பிறகு காவேரிபட்டினம் பேரூராட்சி தலைவர் .பொறுப்பை ஏற்றுள்ள நிலையில் அனைத்து அடிப்படை வசதிகளும்  செய்து தரப்படும் என எதிர்பார்ப்புடன் பொது மக்கள் உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர்
மூர்த்தி