டிரைவிங் லைசென்சை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி?

டிரைவிங் லைசென்சை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி?

தனியார் சேவைகள் மட்டுமின்றி, அரசு சேவைகளும் ஆன்லைனில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. பான் கார்டு விண்ணப்பம் செய்வது முதல், அடையாளச் சான்றுகளை புதுப்பிப்பது, வங்கிக் கணக்குகளை நிர்வகிப்பது, புக்கிங் செய்வது முதல் எல்லா சேவைகளுமே ஆன்லைனில் கிடைக்கிறது. அந்த வகையில், டிரைவிங் லைசென்சை இணையத்தில் எளிய முறையில் புதுப்பிக்கும் அம்சம் இந்தூரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை, டிரைவிங் லைசென்ஸ் உரிமத்தை புதுப்பிக்க, நேரடியாக அரசு அலுவலகத்துக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். அது மட்டுமின்றி, கோவிட் ஊரடங்கின் போது, டிரைவிங் லைசென்ஸ் காலாவதி ஆகி இருந்தாலோ, அல்லது காலாவதி ஆகும் நிலையில் இருந்தாலோ, தானாகவே குறிப்பிட்ட காலம் வரை செல்லுபடியாகும் என்று அரசு அறிவித்தது. தற்போது, லைசென்சை புதுப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியான நிலையில், இனி பிராந்திய போக்குவரத்து அலுவலகம் அலுவலகம் சென்று நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த செயல்முறை முழுவதையும் நீங்கள் ஆன்லைனிலேயே நிறைவேற்றலாம்.

ஆன்லைனில் டிரைவிங் லைசென்சை புதுப்பிப்பது எப்படி

ஆன்லைனில் நீங்கள் டிரைவிங் லைசென்சை புதுப்பிக்க, விவரங்கள் மாற்ற அல்லது டூப்ளிகேட் லைசன்ஸ் பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதை சமர்ப்பிக்க \1\6https://parivahan.gov.in/parivahan/ என்ற இணையத்தளத்துக்கு செல்லுங்கள். உரிய காரணத்தைத் தேர்வு செய்து, விண்ணப்பத்தில் கேட்கப்படும் விவரங்களை உள்ளிட வேண்டும். அனைத்துத் தகவல்களையும் சமர்ப்பித்த பின்னர், ஆர்டிஓ அலுவலகம், உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்ட பின்னர், உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பம் பிராசஸ் செய்தவுடன், உங்களுக்கு தகவல் கிடைக்கும். நீங்கள் ஆர்டிஓ அலுவலகம் சென்று உங்களுடைய டிரைவிங் லைசென்ஸை பெற்றுக்கொள்ளலாம்.

ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் முறை அறிமுகம் செய்யும் முன்பு, ஸ்மார்ட்சிப் என்ற நிறுவனம் மூலமாகத் தான் புதுப்பிகவோ அல்லது டூப்ளிகேட் லைசென்ஸ் வாங்கவோ முடியும் என்ற சூழல் இருந்தது.

தற்போது, யார் வேண்டுமானாலும், ஆன்லைன் அப்ளிகேஷன் மூலம் லைசென்சை புதுப்பித்துக் கொள்ளலாம் அல்லது புதிய கார்டைப் பெறலாம்.

ஆன்லைனில் புதுப்புப்பு விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்த பின்பு, கிட்டத்தட்ட 12 லட்சம் ஓட்டுனர் உரிமங்கள் இந்தூரில் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமின்றி, இவை இந்தூரில் இருந்து சென்ட்ரல் சர்வருக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதோடு மட்டுமல்லாமல், கோப்புகள் மற்றும் விவரங்கள் டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறது.

அது மட்டுமின்றி, தற்போது குழந்தைகளுக்குக் கூட ஆன்லைன் பயன்பாடு தேவைப்படுகிறது, அவர்களும் பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில், ஊரடங்கை ஒரு சாக்காக வைத்து லைசென்சை புதுப்பிக்காமல் இருக்கக்கூடாது. எனவே, போக்குத்துவரத்து துறை காலாவதியான டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பவர்களுக்கு ரூ.1000 அபராதமாக விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.