6,000 ரூபாய் லஞ்சம் : நேர்முக உதவியாளர் கைது!

 6,000 ரூபாய் லஞ்சம் : நேர்முக உதவியாளர் கைது!

திருவண்ணாமலை: தடையில்லா சான்று வழங்க, 6,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, சுகாதாரத்துறை துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் கைது செய்யப்பட்டான்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியை சேர்ந்த, வழக்கறிஞர் திலோக் சந்துரு, 35. இவருக்கு சொந்தமான திருமண மண்டபத்துக்கு, தடையில்லா சான்று கேட்டு, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

சான்று வழங்க, சுகாதாரத்துறை துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர், சுந்தர்ராஜன், 54, என்பவன், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டான். பேரத்துக்கு பின், 6,000 ரூபாய் தருவதாக, திலோக் சந்துரு கூறினார். இது குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகாரளித்தார்.

போலீசார் அறிவுரைப்படி, ரசாயன பொடி தடவிய, 6,000 ரூபாயை, சுந்தர்ராஜனிடம், திலோக் சந்துரு கொடுத்தார். அதை, சுந்தர்ராஜன் வாங்கும் போது, லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும், களவுமாக கைது செய்தனர்.

Popular posts
கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் ஆசிரியர்கள் 3 பேர் கைது.
படம்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்