School is not safe என்னும் வாசகத்துடன் மாணவியின் கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.

பாதுகாப்பான இடம் கருவறை.



School is not safe என்னும் வாசகத்துடன் மாணவியின் கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.

சென்னை அடுத்த மாங்காட்டில் பாலியல் தொல்லை காரணமாக 11-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனால், இந்த சம்பவத்தை தடுக்க முடியாது சூழ்நிலையே தற்போது வரை உள்ளது.

பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடம் கருவறையும் கல்லறையும் தான் என்று அந்த மாணவி எழுதிய கடிதம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது