வி.ஏ.ஓ., அலுவலகங்களில் வசதி: உயர்நீதிமன்றம் உத்தரவு

 வி.ஏ.ஓ., அலுவலகங்களில் வசதி: உயர்நீதிமன்றம் உத்தரவு


மதுரை தென்காசி மாவட்டம் சத்திரப்பட்டி ஜெய்சங்கர். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: 

* குருவிகுளம் ஒன்றியம், திருவேங்கடம் தாலுகாவில் 43 வி.ஏ.ஓ., அலுவலகங்களில் குடிநீர், கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகள் இல்லை. 

* அரசின் உதவிகள்கோரி விண்ணப்பிக்க செல்லும் மக்கள் சிரமப்படுகின்றனர். 

* குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யக்கோரி தென்காசி கலெக்டர், திருவேங்கடம் தாசில்தாருக்கு மனு அனுப்பினேன். 

* நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில், 'அனைத்து வி.ஏ.ஓ., அலுவலகங்களிலும் குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன,' என தெரிவிக்கப்பட்டது.

**நீதிபதிகள் உத்தரவு: **

* மனுதாரர் குறிப்பிடும் பகுதியில் உள்ள வி.ஏ.ஓ.,அலுவலகங்களில் குடிநீர், கழிப்பறை வசதி உள்ளதா என்பதை ஆய்வு செய்து திருவேங்கடம் தாசில்தார் உறுதிப்படுத்த வேண்டும், என்றனர்.

Popular posts
மத்திய அரசு வழங்கிய RTE நிதியை தனியார் பள்ளிகளுக்கு வழங்காமல் தாமதிக்கும் தமிழக அரசை கண்டித்து பாஜக கல்வியாளர் பிரிவு மாபெரும் ஆர்ப்பாட்டம்...!
படம்
பள்ளி நிர்வாகிகளுக்கு கே. ஆர். நந்தகுமார் வேண்டுகோள்....!
படம்
அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை அதிமுகவினரே முன்வந்து செய்கின்றனர் : கே பி முனுசாமி பேச்சு..!
படம்
RTE மாணவர் சேர்க்கை எப்போது.? தேதி குறித்த பள்ளிக்கல்வித்துறை
படம்
வாலாஜாபேட்டையில் *54 ஆம் ஆண்டு* தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நட்சத்திர பேச்சாளர் நடிகை *கௌதமி*
படம்