காணொலி காட்சி மூலம் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைவிற்பனைக் கூடம் திறப்பு விழா

காணொலி காட்சி மூலம் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைவிற்பனைக் கூடம் திறப்பு விழா

ராமநாதபுரம் நவ-16

மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  காணொலி காட்சி மூலம் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூபாய் 6.815 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம் கட்டுமானங்களை மேம்படுத்தி தரம் உயர்த்துதல் திட்டத்தின்கீழ், ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 21 வர்த்தக கடைகள் (ம)சுத்தப்படுத்தி தரம் பிரிப்பு கூடம், உள்ளிட்ட கட்டிடங்களை மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதன்பின் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சங்கர் லால் குமாவத் அவர்கள் புதிதாக திறந்து வைக்கப்பட்ட வர்த்தக கடைகளை முன்னிலை வகித்து குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இதில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி சட்டமன்ற உறுப்பினர்கள் (ராமநாதபுரம்) காதர் பாட்சா முத்துராமலிங்கம் (பரமக்குடி) செ.முருகேசன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். இதில் திமுக நகர பொறுப்பாளர்கள் ராமநாதபுரம்  R.K.கார்மேகம் (வடக்கு) T.R.பிரவீன் தங்கம் (தெற்கு) திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் RDO (ஓய்வு) குணசேகரன் திரு.அஹமது தம்பி மற்றும் மாவட்ட திமுக நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொருளாளர் ஹாஜி.ஷாஜஹான் மற்றும் மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் அப்துல் ஜபார் ,மற்றும் ராமநாதபுரம் நகர செயலாளர் ஹதியத்துல்லா, ராமநாதபுரம் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர் சலாஹுதீன்,மற்றும் குருவாடிஅன்சாரி, ஜனாப் ஆசிக் உசேன்  மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் (ம) வேளாண் விற்பனைக்குழு P.மூர்த்தி, செயலாளர் P.ராஜா, மேலாளர் பழனிக்குமார், கண்காணிப்பாளர் சரவணக்குமார்,மேற்பார்வையாளர்கள், மங்கள சாமி, மலைராஜா, நாகராஜன், இளநிலை உதவியாளர் ஜெயபிரகாஷ், மற்றும் இதர பணியாளர்கள்  திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு