திருமண சான்றிதழ்களை அங்கீகரிக்க புதிய வசதி!

 திருமண சான்றிதழ்களை அங்கீகரிக்க புதிய வசதி!


சென்னை:திருமணம் மற்றும் பிறப்பு சான்றிதழ்களை அங்கீகரிக்க, புதிய ஆன்லைன் வசதியை, பதிவுத் துறை பயன்படுத்த துவங்கியுள்ளது.

சார் - பதிவாளர் அலுவலகங்களில், சொத்து விற்பனைக்கான பத்திரப்பதிவு பிரதான பணியாக உள்ளது. அத்துடன், திருமணம், பிறப்பு தொடர்பான பதிவு பணிகளும் மேற்கொள்ளப் படுகின்றன.

இவ்வாறு பதிவு செய்யப்படும் நிலையில், இவை தொடர்பான சான்றுகளை பதிவுத் துறை வழங்கி வருகிறது.

இந்த சான்றிதழ்களை பிற அரசு அலுவலகங்களில் பயன்படுத்தும் வகையில், 

சார் - பதிவாளர்கள் அங்கீகார சான்று வழங்க வேண்டும்.

இந்நிலையில், மத்திய அரசின் வெளியுறவுத் துறை, சான்றிதழ்களை அங்கீகரிப்பதற்கான புதிய ஆன்லைன் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த சேவை, http://esanad.nic.in/ என்ற, இணையதளம் வாயிலாக வழங்கப்படுகிறது. 

புதிய வசதியை சார் - பதிவாளர்கள் பயன்படுத்த, பதிவுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

ஆன்லைன் பத்திரப்பதிவுக்கான சாப்ட்வேரில், இப்புதிய இணையதளம் சேர்க்கப்பட்டு உள்ளது. 

எனவே, சார் - பதிவாளர்கள் இதை பயன்படுத்தி திருமணம், பிறப்பு சான்றிதழ்களுக்கு ஆன்லைன் முறையில் அங்கீகாரம் வழங்க, பதிவுத் துறை உத்தரவிட்டுஉள்ளது.

இதனால், நாட்டின் எந்த மாநிலத்திலும், எந்த அரசு துறை அலுவலகங்களிலும், இந்த சான்றிதழ்களை பொது மக்கள் பயன்படுத்தலாம்.

இதில், சரிபார்ப்பு தொடர்பான பிரச்னைகள் ஏற்படாது என்று கூறப்படுகிறது.

Popular posts
மத்திய அரசு வழங்கிய RTE நிதியை தனியார் பள்ளிகளுக்கு வழங்காமல் தாமதிக்கும் தமிழக அரசை கண்டித்து பாஜக கல்வியாளர் பிரிவு மாபெரும் ஆர்ப்பாட்டம்...!
படம்
பள்ளி நிர்வாகிகளுக்கு கே. ஆர். நந்தகுமார் வேண்டுகோள்....!
படம்
அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை அதிமுகவினரே முன்வந்து செய்கின்றனர் : கே பி முனுசாமி பேச்சு..!
படம்
RTE மாணவர் சேர்க்கை எப்போது.? தேதி குறித்த பள்ளிக்கல்வித்துறை
படம்
வாலாஜாபேட்டையில் *54 ஆம் ஆண்டு* தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நட்சத்திர பேச்சாளர் நடிகை *கௌதமி*
படம்