நகை அடகு வியாபாரிகள்சங்க பொதுக்குழு கூட்டம்!
காட்பாடி நகை அடகுவியாபாரிகள் சங்கத்தின் 30ம் ஆண்டு பொதுக்குழுகூட்டம் வேலூர் டார்லிங் ஹோட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் பாக்சந்த்ஜெயின், துணைத்தலைவர்
ராஜேந்திரன் ஆகியோர்
தலைமை தாங்கினார் .
துணை தலைவர் மூர்த்தி, சர்ஜன்ராஜ் ஜெயின்,
இணைச்செயலாளர் மகேஷ்ஜெயின், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயலாளர் முரளி 30
ஆண்டு சாதனை குறித்தும்,சங்க வளர்ச்சி குறித்தும் பேசினார். பொருளாளர் ஆனந்த்குமார் வரவு, செலவுஅறிக்கை வாசித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களராக காஞ்சிபுரம் ராஜன்செட்டி, உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பிஐஎஸ் ஹால்மார்க் குறித்துபேசினார் இதில்தமிழ்நாடுஅடகு நகை சங்கத்தின் மாநில தலைவர் தோஜானந்த் சுவாமிஜி கலந்துக்கொண்டு பேசினார்.பின்னர்
புதிதாக பதவி ஏற்றுள்ளதமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்திய அளவில் நமது
சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்ட பிஐஎஸ் ஹால்மார்க் குறித்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட மத்திய அரசிற்கு நன்றி. தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலவாரியத்தின் நமது உறுப்பினர்கள் அனைவரையும்
உறுப்பினர்களாக பதிவுசெய்ய முடிவு செய்யப்பட்டது. உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முடிவில்இணை செயலாளர் வாலாஜா ஜெயின் சஜன்ராஜ்ஜெயின் நன்றிகூறினார்.
விழாவிற்கான ஏற்பாடு
களைசெயற்குழு உறுப்பினர்கள் சந்தோஷ்குமார்,சுரேஷ்குமார் ஆகியோர்செய்திருந்தனர்.
இக்கூட்டத்தில் தாலுக்கா முழுவதிலிருந்து 250க்கும்மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.