முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் திருச்சி மாவட்ட தலைவராக மும்தாஜ் நியமனம்
முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் திருச்சி மாவட்ட தலைவராக மும்தாஜ் நியமனம் : பொது செயலாளர் காயல் அப்பாஸ் அறிவிப்பு!*
திருச்சி , மாவட்ட தலைவராக கே .மும்தாஜ் நியமனம் முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச்யின் மாநில பொது செயலாளர் காயல் அப்பாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள நியமன அறிக்கையில் கூறிருப்பதாவது.
முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் தமிழக மாநில தலைவர் பாத்திமா அலி அவர்களின் ஓப்புதலோடு திருச்சி , சேந்தானீர் புரத்தை சேர்ந்த கே.மும்தாஜ் இன்று முதல் முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் இயக்கத்தின் மாவட்ட தலைவராக நியமிக்கபட்டுள்ளார். மேலும் கே .மும்தாஜ் தலைமையில் இயக்கத்தின் உறுப்பினராக மகளிர்கள் பலரும் இனைந்துள்ளதை முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் வரவேற்கிறது .
பதவியின் தன்மையை உணர்ந்து இறையாண்மைக்கு உட்பட்டு அணைத்து சமூக மக்கள் நலனுக்காக பாடு பட வேண்டும் , இயக்கத்தின் விதி முறைகளுக்கு கட்டு பட்டு செயல் பட வேண்டும் , இயக்கத்தின் வளர்ச்சிக்காக அயராமல் பாடுபட வேண்டும் என கேட்டு கொள்கிறோம் .
மேலும் முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச்யின் திருச்சி மாவட்ட தலைவராக நியமிக்க பட்டுள்ள கே. மும்தாஜ் அவர்களுக்கு இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அணைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டு கொள்கிறோம் . இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.