வாக்குச்சாவடி மையங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்
அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையமான பெருந்துறைIRTTகல்லூரியில் சீலிடப்பட்ட பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன....
அந்த அறையை நேற்று இரவு அந்தியூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் நமது மண்ணின் மைந்தர் அண்ணன் திரு வெங்கடாசலம் அவர்கள்நேரில் சென்று ஆய்வு செய்தார்....
ஆனால் அந்தியூர் சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை கண்காணிப்பு பணிகளுக்கு வேட்பாளர் பக்கம் இருந்து முகவர்களுக்கு அனுமதி வழங்க வில்லை???நாளை முதல் தான் அனுமதி வழங்க முடியும் என்று கூறிவிட்டார்கள்
இதனை அடுத்து வேட்பாளர் திரு AG.வெங்கடாசலம் அவர்கள் இரவு முழுவதும் அவரே அறை வாசலில் காவலுக்கு காத்திருந்தார்!!!!
ஆனால் அந்த அறைக்குள் சென்று வர முன்வழி பாதையை பயன்படுத்தி வருகின்றனர் பின்வாசல் வழியாக வழி பாதை உள்ளது அதனை சீல் இட்டு அடைக்கப்பட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கட்டிடங்கள் சுற்றி லைட் வசதி வேண்டும் CCTV பொறுத்தபட வேண்டும் கட்டிடங்கள் மேல் உள்ள மரக்கிளைகளை வெட்டிட வேண்டும் என்று
மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களிடம் கோரிக்கை விடுத்தார்..
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உடனடியாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்..
ஆனால் நேற்று இரவு மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவு பிறப்பித்தது 24மணிநேரம் ஆக போகிறதுஇன்று இரவு வரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தங்கள் பணிகளை செய்யாமல் காலதாமதம் செய்கின்றனர் அதனை யார் கூறி அதிகாரிகள் காலதாமதம் செய்கின்றனர் என்பது தெரியவில்லை....