கோபி சட்டமன்ற தொகுதி: கே.ஏ.செங்கோட்டையன் வெற்றி வாய்ப்பு எப்படி?

கோபி சட்டமன்ற தொகுதி: கே.ஏ.செங்கோட்டையன் வெற்றி வாய்ப்பு எப்படி?




ஈரோடு மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதி கோபிச்செட்டிப்பாளையம். இங்கு கடந்த 1957ஆம் ஆண்டு முதல் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. 9 முறை அதிமுகவும், 2 முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் 96,177 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து இவருக்கு பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. கோபி தொகுதியில் 1980 முதல் 2016 வரை 7 முறை செங்கோட்டையன் எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறார்.


இந்நிலையில் 2021 சட்டமன்ற தேர்தலில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிட செங்கோட்டையனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவரை எதிர்த்து திமுக சார்பில் ஜி.வி.மணிமாறன், நாம் தமிழர் கட்சி சார்பில் எம்.கே.சீதாலட்சுமி, அமமுக சார்பில் என்.கே.துளசிமணி, மக்கள் நீதி மய்யம் சார்பில் என்.கே.பிரகாஷ் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இங்கு கொங்கு வேளாளர் கவுண்டர்கள், வேட்டுவக்கவுண்டர்கள், நாடார்கள் ஆகியோர் பெரும்பான்மையாக இருக்கின்றனர். மேலும் ஆதிதிராவிடர் சமூகத்தினர், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் கணிசமாக உள்ளனர்.
இந்த தொகுதி இயற்கை எழில் சூழ்ந்த பகுதி என்பதால் கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முக்கிய இடம் பிடித்து வருகிறது. தொடர்ச்சியாக பல்வேறு படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொடிவேரி அணைக்கட்டு பகுதி முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு சுற்றுலா பயணிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர். குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்தில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

கோபி சுற்றுவட்டாரப் பகுதியில் கோதுமை, கரும்பு, மஞ்சள், வாழை, தென்னை, மல்பெரி ஆகியவை முக்கியமாக உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இங்குள்ள விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைப்பதில்லை. தங்கள் விளைபொருட்களை குளிர்ந்த நிலையில் சேமித்து வைக்க போதிய வசதிகள் இல்லை. தடபள்ளி கால்வாயில் கலக்கும் கழிவுநீரால் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு பெரிதும் அவதிப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். குப்பைகளை அகற்ற போதிய வசதிகள் செய்து தரவில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தவில்லை.

பட்டுக்கூடு விற்பனை செய்ய உரிய மையம் உண்டாக்கவில்லை. இதனால் பல விவசாயிகள் பட்டுக்கூடு உற்பத்தி தொழிலையே கைவிட்டு விட்டனர். கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை உரிய நேரத்தில் அளிக்கவில்லை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். அமைச்சர் செங்கோட்டையன் தரப்பைப் பொறுத்தவரை, பள்ளிக்கல்வித் துறையின் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அத்திக்கடவு - அவிநாசி திட்டம் செயல்பாடு உள்ளிட்ட விஷயங்கள் செய்து தரப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

ஆனால் தொகுதி வளர்ச்சிக்காக குறிப்பிடத்தக்க வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என்று திமுக தரப்பு குற்றம்சாட்டுகின்றனர். கோபிச்செட்டிப்பாளையம் மக்களின் கோரிக்கைகளில் ஒன்றான புதிய மாவட்டம் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர். இவ்வாறு அதிமுக தரப்பிற்கு சாதக, பாதக விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. இதனால் இம்முறை திமுக வலுவான போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன், திமுக வேட்பாளர் மணிமாறன் இடையே கடும் போட்டி இருந்தாலும் இங்கே அதிமுகவின் கொடியே அதிகம் பறக்கிறது எம்ஜிஆர் காலம் தொட்டு கோபி அதிமுகவின் கோட்டையாக திகழ்கிறது அதுவும் இந்த தேர்தலில் எடப்பாடியின் புகழும் அமைச்சர் செங்கோட்டையன் புகழும் ஓங்கி ஒலிக்கிறது எனவே இங்கு இரட்டை வேதான் பிரகாசிக்கும்.

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்