முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் M. முருகன் வாக்கு சேகரிப்பு.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் M.முருகன் ஏர்வாடி தர்ஹா பாதுஷா நாயகம் மக்பராவில் சிறப்பு பிரார்த்தனை செய்து விட்டு ஏர்வாடி, முத்தரையர்நகர், சின்ன ஏர்வாடி, சடை முனியன் வலசை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு சென்று குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.சென்ற இடங்களில் எல்லாம் கிராம மக்கள் திரண்டு வந்து வேட்பாளருக்கு மாலை, சால்வை ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். முன்னதாக ஏர்வாடி தர்ஹாவிற்கு வருகை தந்த வேட்பாளர் முருகனுக்கு ஹக்தார் கமிட்டியினர் சால்வை அணிவித்து வரவேற்றனர். உடன் அ.ம.மு.க. தே.மு.தி.க எஸ்.டி.பி.ஐ ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி
ஒளிப்பதிவாளர்
N.A. ஜெரினா பானு