சசிகலா ஆதரவு தங்களுக்குதான்னு சொல்லும் தினகரன்!

 

சசிகலா ஆதரவு தங்களுக்குதான்னு சொல்லும் தினகரன்!



அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பினனர் அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:


கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் ஆசி பெறுவதற்காக வந்தேன். தீயசக்தி திமுகவும், துரோக சக்தி அதிமுகவும் மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது. மக்களுக்கு நன்மை தரும் ஆட்சி அமைக்க எங்கள் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

சசிகலாவின் மானசீக ஆதரவு, எங்களுக்கு தான்; வேறு யாருக்கும் அவரின் ஆதரவு இருக்காது. மக்களை ஏமாற்றும் வெற்று வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக அதிமுக, திமுகவினர் தந்துள்ளனர்.

தமிழகம் 7 லட்சம் கோடி ரூபாய் கடனில் தள்ளாடும்போது வெற்றி நடை போடுகிறது எனச் சொல்லி மக்களின் காதில் பூச்சுற்றி வருகின்றனர்.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடும் என்கின்றனர். அதை கண்டு, மக்கள் பயப்படுகின்றனர். கட்டாயம் இருந்ததால் ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.

பயம் இருந்திருந்தால் சம்பந்தமே இல்லாமல் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டு இருக்கமாட்டேன் என்று டிடிவி தினகரன் கூறினார்.

அமமுக கட்சி தொடர்பான நடவடிக்கைகளில் தனது புகைப்படத்தையோ, பெயரையோ பயன்படுத்தக்கூடாது என்று சசிகலா அண்மையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த டிடிவி தினகரன் இதுவும் சொல்வார் இன்னுமும் சொல்வார்.

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்