சசிகலா ஆதரவு தங்களுக்குதான்னு சொல்லும் தினகரன்!
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பினனர் அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் ஆசி பெறுவதற்காக வந்தேன். தீயசக்தி திமுகவும், துரோக சக்தி அதிமுகவும் மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது. மக்களுக்கு நன்மை தரும் ஆட்சி அமைக்க எங்கள் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
சசிகலாவின் மானசீக ஆதரவு, எங்களுக்கு தான்; வேறு யாருக்கும் அவரின் ஆதரவு இருக்காது. மக்களை ஏமாற்றும் வெற்று வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக அதிமுக, திமுகவினர் தந்துள்ளனர்.
தமிழகம் 7 லட்சம் கோடி ரூபாய் கடனில் தள்ளாடும்போது வெற்றி நடை போடுகிறது எனச் சொல்லி மக்களின் காதில் பூச்சுற்றி வருகின்றனர்.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடும் என்கின்றனர். அதை கண்டு, மக்கள் பயப்படுகின்றனர். கட்டாயம் இருந்ததால் ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடும் என்கின்றனர். அதை கண்டு, மக்கள் பயப்படுகின்றனர். கட்டாயம் இருந்ததால் ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.