கங்கலேரி கிராமத்தில் வேளாண் மாணவிகளின் நேரடி பயிற்சி முகாம்
அதியமான் வேளாண்மை கல்லூரியில் நான்காம் ஆண்டு இளங்கலை வேளாண்மை பயிலும் 13 மாணவிகள் ஊரக வேளாண்மைபணி அனுபவ திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி வட்டாரம் கங்கலேரி வருவாய்
கிராமம் பூதி பட்டியில் பிப்ரவரி 13 முதல் கிராமப்புற வேளாண் தொழில்நுட்பங்களை பற்றி தெரிந்து கொள்கின்றனர் இதன் ஒரு பகுதியாக தக்காளி போன்ற பயிர்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படும் மூன்றில் புது கிராமத்தில் வேளாண்மை பயிர் கண்காட்சியை ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நுண்ணுயிர் உரம் பாரம்பரிய விதைகள் கலப்பு விதைகள் இனக்கவர்ச்சிப் பொறிகள் பேர் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் குறைபாடுகளை கண்டறிவதற்கான கண்காட்சி காட்சிப்படுத்தி இருந்தனர் இக்கண்காட்சியில் விவசாயிகள் கூட்டுப் பண்ணை மூலம் இயங்கும் சுய உதவி குழுக்கள் மற்றும் பொதுமக்கள் பயன் பெற்றனர்