தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 தேர்தல் புறக்கணிப்பு .தமிழக முதலமைச்சரின் எடப்பாடி பழனிச்சாமியின்சொந்த மாவட்டத்தில் அவலநிலை?
சேலம் மாவட்டம் .ஏற்காடு ஒன்றியம் (கெடக்காடு)கிராமம் கலைச்சோலை ஊராட்சி பகுதியில் அடிப்படை வசதிகள் கூட இன்னும் கிடைக்கப் பெறாத இருக்கிறது .கிராமத்தில் யாராவது இறந்தால் இன்னுமும் மூங்கில் குச்சியில் தொட்டில் கட்டி தூக்கிக்கொண்டு செல்லும் அவல நிலை இன்னும் நடைபெற்று வருகிறது .குடிப்பதற்கு தண்ணீர் எடுக்கச் செல்ல வேண்டுமென்றால் வெகு தொலைவு நடக்க வேண்டும். மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால் சுமார் 10கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். பெளாத்தூர் பள்ளிக்கூடத்துக்கு செல்ல வேண்டுமென்றால் ஐந்து கிலோ மீட்டர் சென்று தான் போய் படிக்க செல்ல வேண்டும் .எங்களது கோரிக்கையை எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் .சித்ராவிடம் பலமுறை மனு தந்தும் இதுநாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை
இது சம்பந்தமாக சேலம் மாவட்ட ஆட்சியர் .மத்திய மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் .ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர். அனைவரிடமும் மனு கொடுத்தும் எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகூட செய்ய தராத( ADMK)சித்தரா வாக்கு சேகரிக்க வந்தால் அவர்களை விரட்டி அடிப்போம் எனவும் .வருகின்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 தேர்தலை கறுப்புக்கொடி கட்டி புறக்கணிக்க போகிறோம்என்பதை ஊர்பொதுமக்கள் மாதையன் ஊர்முக்கிய தாரர் கூறுகையில் பத்திரிக்கை செய்தி அவர்களும் .ஊடக நண்பர்களும். எங்களுடைய அவலநிலையை இந்த நாட்டிற்கு .இந்த அரசுக்கு .சமூக ஆர்வலர்கள் தன்னார்வத் தொண்டர்கள். அனைவருக்கும் தெரிவிக்குமாறு உங்களை இருகரம் கூப்பி பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்