விவசாய கடன்கள் தள்ளுபடி: முதல்வர் அதிரடி அறிவிப்பு!

விவசாய கடன்கள் தள்ளுபடி: முதல்வர்  அதிரடி அறிவிப்பு!



16.43 லட்சம் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப் பேரவையில் அறிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் விவசாயிகளின் பயிர்க்கடன் அனைத்தும் தள்ளுபடி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.

கொரோனா, நிவர் புயல், தொடர் மழை காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தமிழகத்தில் 16.43 லட்சம் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகள் மூலமாக பெற்ற ரூ 12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
இதுகுறித்த அரசாணை விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் அறிவிப்புக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மேசையை தட்டி வரவேற்பு அளித்தனர்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில் 2016ஆம் ஆண்டில் தமிழக அரசு பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.