காணாமல் போன கொரோனா...... கொரோனா உளவியல்..... 

காணாமல் போன கொரோனா...... கொரோனா உளவியல்..... 


நம் நாட்டின் கொரொனா எண்ணிக்கை 100 இருந்த போது மக்களிடமிருந்த பயம்,   இன்று 1,00,000 ஐ தாண்டிய போது இல்லை...... 😎


ஏன்...??!


உளவியல் ரீதியாக பார்த்தால் இதற்கு விடை கிடைக்கும்.


      "குப்ளர் ரோஸ் மாடல்"  என்று ஒரு தத்துவம் உள்ளது. அதாவது, மனிதனுக்கு எதேனும் துக்க நிகழ்வு, இயற்கை பேரிடர், விபத்து  போன்றவை நடக்கும் போது, அவன் 5 கட்டங்களை கடந்து செல்கிறான்.


அவை.... 
1.Denial
2.Anger
3.Bargain
4.Depression 
5.Acceptance


1.Denial -
அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது என்பதை  நம்ப மறுப்பது. உதாரணத்திற்கு நமக்கெல்லாம் கொரொனா வராது என்று மறுத்தது. அப்படியே வந்தாலும்,  நமது ஊர் வெயிலில் அது பரவாது என்று  மீண்டும் மறுத்தது... 🤫


2.Anger -
கோபம் கொள்வது. உதாரணத்திற்கு , ஊரடங்கு போட்டு விட்டார்களே, வருமானம் பாதிக்குமே, இயல்பு வாழ்க்கை கெட்டு விட்டதே என்று கோபம் கொண்டது. 😠


3. Bargain -
கொரோனா  வராமல் இருந்திருக்கலாமே , ஊரடங்கு உத்தரவு போடாமல் விட்டிருக்கலாமே என்று உள்ளுக்குள் புலம்புவது.  😷


4. Depression -
இப்படி ஆகிவிட்டதே என்று மன அழுத்தம்,  மனச்சோர்வு அடைவது. 😢


5. Acceptance -
கடைசி கட்டம்.  வேறு வழியில்லாமல் , அதை ஏற்றுக்கொள்வது. அதாவது..... கொரோனாவுடன்  வாழ பழகிகொண்டது 😂😂


இந்த 5 நிலைகள் , கொரோனாவிற்கு மட்டுமல்ல. மனித வாழ்வில் உண்டாகும் அனைத்து பிரச்சினைகளக்கும்  பொருந்தும்.


புத்திசாலி என்ன செய்வான் ?....


"இதுவும் கடந்து போகும்" என்று உணர்ந்து , முதல் நிலையிலிருந்து நேராக ஐந்தாம் நிலைக்கு சென்று விட்டு, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, மன அழுத்தம் இல்லாமல், வாழ்வில் முன்னேற்றம் அடைவான். 💪


ஐந்தாம் நிலைக்கு செல்லமுடியாமல்  சிக்கிக்கொள்பவன், மன அழுத்தம் ஏற்பட்டு, மனநோயாளியாகிறான் ! 😴


ஆக, உணர்வோம்... தெளிவோம்....
தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, வெல்வோம்.... 


இதுவும் கடந்து போகும் ! 


இப்போது நமது மக்களிடம் கொரோனா அச்சமே துளி கூட இல்லை. அது நம்மை ஒ்னறும் செய்து விட முடியாது என்கிற தாிையம் , ஒ்னறு இரண்டு தொற்று இருந்தபோது ஓவராக பயந்துக்கொண்டிருந்த மக்கள் இப்போது ஆயிரக்கணக்கில் பரவிக்கிடக்கும் போது அது பற்றிய அச்சம் துளியும் இல்லாமல் கொரோனாவா அது ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டு போகும் அளவிற்கு தயாராகி விட்டனா்,


இதை  ஊதி பொிதாக்குவதே ஊடகங்களும் எதிா்கட்சிகளும் தான், மக்களை அவா்கள் போக்கிலே விட்டுவிட்டால் ஒரு பிரச்சனையும் இல்லை. அவா்களை இழுத்து பிடித்து ஒரே இடத்தில் அடைத்து வைப்பதால் தான் பல பிரச்சனைகள் தோன்றுகின்றன,


அரசு ஊரடங்கை முற்றிலும் தளா்த்துவது நல்லது என்று மக்கள் நினைக்கிறாா்கள், இப்படியே இன்னும் கொஞ்ச நாள் அடைத்து வைத்தால் கொரோனா மரணங்களை விட ஒரு வேலையும் செய்யாமல் உணவின்றி சாவோாின் எண்ணிக்கை அதிகாித்து விடும்.


ஓசியில சோறு போடுபவன் இன்னும் எத்தனை நாளைக்கு போடுவான், இ்பேபாது தானம் தா்மம் செய்பவா்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது,


சீக்கிரமா இவங்க எல்லோரையும் திறந்து விடுங்க அப்பாாாா.....