நகராட்சி ஆணையர்கள் மாற்றம் ஏன்? திடுக்கிடும் தகவல்கள்...!
தமிழகத்தில் காஞ்சிபுரம், மறைமலை நகர், தாம்பரம் உள்ளிட்ட நகராட்சி ஆணையர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சி நகராட்சி ஆணையர் காந்தி ராஜ் பல்லாவரம் நகராட்சிக்கும்,
கும்பகோணம் நகராட்சி ஆணையர் லட்சுமி காஞ்சிபுரம் நகராட்சிக்கும்.
காரைக்குடி நகராட்சி ஆணையர் லட்சுமணன் தாம்பரம் நகராட்சிக்கும்,
கோவில்பட்டி நகராட்சி ஆணையர் ராஜாராம், மறைமலை நகர் நகராட்சிக்கும்
தர்மபுரி நகராட்சி ஆணையர் தனுமூர்த்தி பொள்ளாச்சி நகராட்சிக்கும்,
திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி கும்பகோணத்திற்கும்,
கொடைக்கானல் நகராட்சி ஆணையர் நாராயணன் காரைக்குடிக்கும்,
ராமநாதபுரம் நகராட்சி ஆணையர் விஸ்வநாதன் உதகைக்கும்,
ராஜபாளையம் நகராட்சி ஆணையர் சுந்தராம்பாள் கொடைக்கானலுக்கும்
கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் சந்திரா திருவண்ணாமலைக்கும்,
கடலூர் நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி கரூருக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதுபோன்று கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையராக முருகேசன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நகராட்சி ஆணையர்கள் மாற்றப்படுவது குறித்து விசாரித்ததில், வீட்டு வரி குறைப்பு , நகராட்சி பகுதிகளில் வீடு கட்ட ஒப்புதல் ஆகியவற்றுக்கு கமிஷன் பெறப்படுவதால் மக்கள் அதிருப்தி அடைகின்றனர். எனவே இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நல்ல அதிகாரிகளைக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஆனால், தாங்கள் இந்த இடத்துக்கு வருவதற்கே நிறைய பணம் கொடுத்துத்தான் வருகிறோம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர். இந்த தகவல் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் கவனத்துக்குச் சென்ற நிலையில், பணியிடமாறுதலுக்கு யாரும் எந்த பணமும் வாங்கக் கூடாது என்பதற்காக நகராட்சி ஆணையர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர்” என்கின்றனர் அத்துறை வட்டாரத்தில்.
ஆனால் உண்மையில் நடப்பதே வேறு லஞ்சம் வாங்க முடியாது ஆசிரியர் பணியிட மாறுதலுக்கு லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கும்போது தினந்தோறும் லட்சக்கணக்கில் புரளும் நகராட்சி ஆணையர் பதவி அதுவும் அதிக வருமானம் தரக்கூடிய நகராட்சிகள் மாநகராட்சிகளுக்கு மாறுதல் பெறுவதென்பது பல லட்சங்கள் கொடுத்தால் தான் முடியும் என்பது எழுதப்படாத சட்டம்.
இப்போது நடந்துள்ள இந்த மாறுதல்கள் என்பது விரைவில் நடக்க உள்ள நகராட்சி உள்ளாட்சி தேர்தல்களில் மாற்றத்தை ஏற்படுத்த நடந்தது என்று கூறுகிறார்கள்.
