தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கொரோனா கட்டுப்பாடு உதவி மையம் திறந்து வைக்கப்பட்டது.

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கொரோனா கட்டுப்பாடு உதவி மையம் திறந்து வைக்கப்பட்டது.    


 ராமநாதபுரம் மாவட்டம்   தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சந்தை திடல் அருகில் உள்ள மாவட்ட  தலைமையகத்தில் கொரோனா கட்டுப்பாடு உதவி மையம் திறந்து வைக்கப்பட்டது.

கொரோனா பாதிப்பில் உள்ளானவர்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 

ராமநாதபுரம் தெற்கு மாவட்டம் சார்பில் 08−06−2021 அன்று செவ்வாய் கிழமை கொரோனா கட்டுப்பாட்டு உதவி மையம்திறக்கப்பட்டது.


இதில் கேணிக்கரை காவல்துறை ஆய்வாளா் சரவண பாண்டியன்  கலந்து கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சேவைகளை வெகுவாக  பாராட்டினார்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் A.முகம்மது அயூப்கான் தலைமை தாங்கினார்.   மாவட்ட துணை செயலாளர்கள் தஸ்தக்கீர்,ஜியாவுல் ஹக்,சுல்த்தான் மற்றும் பேரிடர் உதவி மைய பொருப்பாளர் யாசர் அரபாத் முன்னிலை வகித்தனர்.

கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது, நோய்குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், 

நோய் தொற்று கண்டறியும் முகாம் ஏற்பாடு செய்வது, தடுப்பூசி முகாம், ஆக்சிஜன், ஆம்புலன்ஸ் வசதி, தனிமைப் படுத்தப்பட்டவர்களுக்கு உணவு வழங்குதல், நோய் தொற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் ஆறுதல் வழங்குதல் நோய் எதிர்ப்பு சக்திக்கான கபசுர குடிநீர் வழங்குதல், கொரோனா நோயால் இறந்தவர்களை அடக்கம் செய்தல், மருந்து உபகரணங்கள் கிடைக்க வழிகாட்டுதல் உள்ளிட்ட அனைத்து  பணிகளும் மேற்கொள்ளப்படும்.

முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஐம்பது மையங்கள் திறக்கப்படுவதாக இதன் பொருப்பாளர்கள்  தெரிவித்தனர். 

மாவட்ட செயலாளர் ஆரிப்கான் இதற்கான ஏற்பாட்டினை செய்திருந்தார்.  

கொரோனா பாதிப்பில் உள்ளானவர்கள் கொரோனா கட்டுப்பாட்டு உதவி மைய எண்:9342387346 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும் வருகை தந்து சிறப்பித்த காவல்துறை ஆய்வாளர் சரவணபாண்டியனுக்கு ராமநாதபுரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருக்குறான் புத்தகம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.   

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, நிருபர் N.A .ஜெரினா பானு