காவேரிப்பாக்கம் அருகே பைக் திருடிய வாலிபர் கைது!

 காவேரிப்பாக்கம் அருகே பைக் திருடிய வாலிபர் கைது


ஜூலை 01 

காவேரிப்பாக்கம் அடுத்த பூண்டி கிராமம் பிராமண தெருவைச் சார்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் வெங்கடேசன் என்பவர் கடந்த 25ஆம் தேதியன்று காஞ்சிபுரம் வேலைக்குச் சென்று தனது இரண்டு சக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இரவு சுமார் 10.30 மணிக்குக் காவேரிப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே வாகனம் பழுதாகி நின்று விட்டது

அந்த இடத்திலேயே வாகனத்தை லாக் செய்துவிட்டு அங்குள்ள மெக்கானிக்கை அழைத்து வரச் சென்றுள்ளார். பிறகு அங்கு வந்து பார்த்தபோது இரண்டு சக்கர வாகனத்தை காணவில்லை

இதுசம்பந்தமாக வாகனத்தின் உரிமையாளர் வெங்கடேசன் காவேரிபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்துள்ளனர்

இந்த நிலையில் நேற்று வாணி சத்திரம் அருகே காவல் உதவி ஆய்வாளர் வசந்த் தலைமையிலான வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, ஆற்காடு அண்ணம்பாளையத்தை சேர்ந்த பாலாஜி என்பவர் வாகனத்தை ஒட்டி வந்துகொண்டிருந்தார்

அப்போது அவரை நிறுத்தி ஆவணங்களைக் கேட்டபோது முன்னுக்குப் பின்னான பதில் சொன்னதால் சந்தேகமடைந்த போலீசார் அவரைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது கடந்த 25ஆம் தேதி திருடுபோன வெங்கடேசன் என்பவரின் வாகனம் என்பது தெரியவந்தது

எனவே போலீசார் வாகனத்தை திருடிய நபர்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 

 ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...