"வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் நிகழ்ச்சி!!
அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் எம்.பி.கதிர் ஆனந்த் மற்றும் ஆட்சிய உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.
அப்போது அமைச்சர் துரைமுருகன் கிரின் சர்கிள் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது அதை ஏன் கலெக்டர் கண்டு கொள்ளவில்லை என்று பேசி சில ஐடியாவையும் அளித்தார்.
அவர் பேசியதன் விவரம் வருமாறு,
விவசாயிகளின் நலன் கருதி 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் இருப்பதாகவும்,வறட்சி காலங்களில் வேளாண்மை மற்றும் குடிநீர் பற்றாக்குறையை போக்க தென்பெண்ணை ஆற்றில் மழை காலங்களில் வீணாகும் தண்ணீரை
பாலாற்றில் திருப்பி விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மூன்று மாத காலத்திற்கு தண்ணீர் வருவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது.
ஆந்திர மாநிலத்தில் தற்போது மழை அதிக அளவில் பெய்து வருவதால்
குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா அணை முழுவதுமாக நிரம்பி இருப்பதால் வரும் 18ஆம் தேதி திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.அதற்குள்ளாக மோர்தானா அணை நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாரப்படும் எனவும் கூறினார்.மேலும் மோர்தானா அணையின் நீர்வரத்து கால்வாயில் சிலர் உடைப்பை ஏற்படுத்தி அதன் மூலம்தண்ணீரை திருடுகின்றனர்,அவ்வாறு செயல்படும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் காவல்துறை உதவியுடன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்
வேலூர் மாவட்டத்தில் அவ்வப்போது வறட்சி சூழ் நிலை ஏற்படுவதால் மழைக்காலங்களில் பாலாற்றில் தண்ணீர் வீணாக செல்வதை தடுக்கும் வகையில்
பாலாற்றில் தடுப்பணை கட்டுவதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன இப்பணி முடிந்தவுடன் தடுப்பணைகள் கட்டப்படும் என தெரிவித்தார்.
வேலூர் புதிய பேருந்து நிலையம் தற்போது விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மேலும் அகலப்படுத்தி வாகனங்கள் நிறுத்த வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இவை கோயில் இடம் என தெரிகிறது.இது பொது மக்களின் வசதிக்கேற்ப மாற்றி அமைக்கப்படும்.
கிரீன் சர்க்கிளில் போக்குவரத்தை சரிசெய்யவேண்டும் ஜி.ஆர்.டி. ஓட்டல் அருகே உள்ள விளக்கு கம்பத்தை அகற்றினால் பக்கவாட்டு சாலைஅமைக்கப்பட்டால் வாகணங்கள் செல்ல வசதியாகும் என்றார்.
மேலும், தமிழகத்தில் கொரோனா தொற்றை முழுவதுமாக கட்டுப்படுத்த தமிழக முதலமைச்சர் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
தடுப்பூசி போடுவதில் படித்தவர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் கூட தயக்கம் காட்டி வருகின்றனர்.அந்த நிலை மாற வேண்டும்.
முதலமைச்சர் மனித உயிர்களை மட்டுமல்ல விலங்குகளின் உயிர்கள் காப்பதிலும் முக்கியத்துவம் கொடுத்து முதல்வர் செயல்பட்டு வருகிறார்.
தமிழகத்தின் வளர்ச்சிக்காக மேலும் பல திட்டங்களை தமிழக முதலமைச்சர் உருவாக்க இருப்பதாகவும் துரைமுருகன் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சண்முகசுந்தரம்,வேலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ப.கார்த்திகேயன், ஈஸ்வரப்பன், நந்தகுமார், மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...
