ராமநாதபுரம் மீனாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு ஒரு லட்சம் நன்கொடை

ராமநாதபுரம் மீனாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு ஒரு லட்சம் நன்கொடை


ராமநாதபுரம் ஏப்-30   

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தின்  அருகில்  அமைந்துள்ள மிக பழைமையான அருள்மிகு மீனாட்சியம்மன் ஆலயம்  பழுதடைந்ததின் காரணமாக அக்கோவிலுக்கு திருப்பணி செய்திட ஆன்மீக பெருமக்களால்   இயன்றபொருள் உதவி மற்றும் கட்டுமான பொருட்கள் நிர்வாகத்தினரிடம் வழங்கிவருகிறார்கள்.இதன் அடிப்படையில் அரசு விளையாட்டு மைதானத்தின் அருகே வேலு மாணிக்கம் ஹாக்கி மைதானத்தின் மிக அருகில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோவிலுக்கு திருப்பணி செய்திட நன்கொடையாக ரூ.1 லட்சத்தை திருப்பணி நிர்வாகத்தினரிடம்  ராமநாதபுரம் மக்கள் மத்தியில்  பெயர் பெற்ற கேணிக்கரை பகுதியில் அமைந்துள்ள வேல் மருத்துவமனை மருத்துவர் மலையரசு மருத்துவமனை நிர்வாக இயக்குநர் லீலாவதி தம்பதியினரின்  புதல்வி செல்வி. ஜோத்ஸ்னாவின் பிறந்தநாளை முன்னிட்டு ரூ.1 லட்சத்தை வழங்கினார்கள்.  மேலும் திருப்பணி வேகமாக நடந்திட பொதுமக்களும் பக்தகோடிகளும் , இயன்ற பொருள் உதவியும், கட்டுமான பொருட்கள் வழங்கி அம்மனின் அருள்பெற நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டனர்.  

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு