பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ 5 லட்சம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு.....!
பெருந்தொற்று பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் தலா ரூ.5 லட்சம் வைப்புநிதி*
*பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, அரசின் இல்லங்களில், மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் இடம்*
*கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்புநிதி*
*குழந்தைகளின் பெயரில் செலுத்தப்படும் ரூ.5 லட்சம் வைப்புநிதியை, அவர்கள் 18 வயது பூர்த்தியான பின் எடுத்துக்கொள்ளலாம்*
*18 வயது பூர்த்தியாகும்போது ரூ.5 லட்சம் வைப்புநிதி, வட்டித் தொகையோடு சேர்த்து வழங்கப்படும்*
*குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்டவற்றை அரசே ஏற்கும்*
*கொரோனா தொற்றால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளின் தந்தை அல்லது தாய்க்கு உடனடியாக ரூ.3 லட்சம் வழங்கப்படும்*
*பெற்றோரை இழந்து உறவினர்கள் அல்லது கார்டியன்கள் ஆதரவில் வளரும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் பராமரிப்புச் செலவாக ரூ.3 ஆயிரம் உதவித் தொகை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு*
