கள்ளக்குறிச்சியில் மீண்டும் ஒரு ஆம்புலன்ஸ் விபத்து, 3 பேர் காயம்
*கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து சங்கீதா என்ற நிறைமாத கர்ப்பிணி பெண், பிரசவத்திற்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.*
*ஆம்புலன்சில் கர்ப்பிணி பெண் சங்கீதா, மாமியார் ரோஸ், உறவினர் இளையனார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தி , ஆஷா பணியாளர் அமுதவல்லி ஆகியோர் இருந்தனர்.*
*கள்ளக்குறிச்சி அடுத்த ரோடுமாமந்தூர் அருகே சென்ற போது, ஆம்புலன்ஸ் நிலை தடுமாறி சாலையோரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.*
*இதில் மூன்று பேர் காயங்களுடன் உயிர் தப்பி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.*
*கர்ப்பிணி பெண் சங்கீதா, பிரசவத்திற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.*
