மு.க.ஸ்டாலின் ஒரு கோடி வழங்க வேண்டும். உயா்நீதி மன்றம் நோட்டீஸ்...!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பல பெண்களிடம் முகநூல் மூலம் உள்ளிட்டவைகள் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து. அந்த மாணவிகளை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரிராஜன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிபிஐ விசாரணையும் நடந்து வருகிறது. தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பொள்ளாச்சி விவகாரத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனது பெயரும் அடிபட்டது. அவரது மகன்களைச் சம்பந்தப்படுத்தி சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.
ஆனால், இந்த விவகாரத்தை வெளிக்கொண்டு வந்த தனக்கோ தனது குடும்பத்தினருக்கோ இதில் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும், திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் தூண்டுதலின் பேரில் தனக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்படுகிறது என்றும் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம் சாட்டினார்.
அதன் தொடர்ச்சியாக, பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி, ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஆனால், இந்த விவகாரத்தை வெளிக்கொண்டு வந்த தனக்கோ தனது குடும்பத்தினருக்கோ இதில் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும், திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் தூண்டுதலின் பேரில் தனக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்படுகிறது என்றும் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம் சாட்டினார்.
அதன் தொடர்ச்சியாக, பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி, ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொள்ளாச்சி விவகாரத்தில் தன்னை சம்பந்தப்படுத்தி பொது மேடைகளில் பேசிய உரைகள் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதாக தனது மனுவில் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வந்த போது, இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆகஸ்ட் 18ஆம் தேதிக்குள் ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும் என்றும் தனது உத்தரவில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.