15,000 பேருக்கு வேலை... கொரோனா சமயத்தில் ஆறுதல்!

15,000 பேருக்கு வேலை... கொரோனா சமயத்தில் ஆறுதல்!



தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஷிவ் நாடாருக்குச் சொந்தமான தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான HCL டெக்னாலஜீஸ், நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் காலாண்டு வருவாய் விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன. அதன்படி, ஜனவரி - மார்ச் காலாண்டில் 24.3 சதவீத உயர்வுடன் ரூ.3,154 கோடி லாபம் ஈட்டியுள்ளது ஹெச்.சி.எல். நிறுவனம். 2019ஆம் ஆண்டின் ஜனவரி - மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் 2,568 கோடி மட்டுமே லாபம் ஈட்டியிருந்தது.


வருவாயைப் பொறுத்தவரையில், 2019 ஜனவரி - மார்ச் மாதங்களில் ரூ.15,990 கோடியாக இருந்த மொத்த வருவாய், இந்த ஆண்டின் ஜனவரி - மார்ச் மாதங்களில் ரூ.18,590 கோடியாக அதிகரித்துள்ளது. இது 16.3 சதவீத வளர்ச்சியாகும். இக்காலாண்டில் வருவாய் மற்றும் நிகர லாபம் அதிகரித்திருந்தாலும், நடப்பு காலாண்டிலும் அடுத்து வரும் மாதங்களிலும் கொரோனாவால் பெரிய பாதிப்பு இருக்கும் என்று ஹெச்.சி.எல். நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்திடம் ஆர்டர் பெறுவது போன்ற செயல்பாடுகள் ஊரடங்கு காலத்துக்குப் பின்னர் மந்தமாகவே இருக்கும் என்பதால் தொழில் வளர்ச்சியும், வருவாய் ஈட்டுவதும் சவாலான ஒன்றுதான் என்று ஹெச்.சி.எல். நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான சி.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

 



வருவாய் விவரங்களை வெளியிட்ட பின்னர் புதிதாக வேலைவாய்ப்புகள் வழங்குவது குறித்தும் ஹெச்.சி.எல். நிறுவனம் தெரிவித்தது. புதிதாகப் பட்டம் பெற்ற 15,000 பேருக்கு இந்த ஆண்டில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று இந்நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது கொரோனா தொடர்பான பிரச்சினைகள் இருப்பாதல் பணியமர்த்தும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், 2020 முடிவுக்குள் மேற்கூறிய வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் ஹெச்.சி.எல். நிறுவனம் உறுதியளித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய ஐடி துறையில் மந்தநிலை நீடித்தும் வரும் சூழலில் புதிய வேலைவாய்ப்புகள் போதுமான அளவில் உருவாக்கப்படவில்லை. இதுபோன்ற சூழலில் ஹெச்.சி.எல். நிறுவனத்தின் இந்த அறிவுப்பு வேலை தேடுவோர் மத்தியில் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.



Popular posts
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்
ஈரோடு கிழக்கு; திமுக எடுத்த திடீர் முடிவு..…! அதிர்ச்சியில் மக்கள்...!!
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
TATA எலக்ட்ரானிக்ஸ் எடுத்துள்ள புதிய முடிவு...! கிருஷ்ணகிரி தர்மபுரி மக்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள்...!!
படம்